September 18, 2024

பணிகள்:

  1. பிரதேச சபை சட்டத்திற்கமைய பொறுப்புச் சாட்டப்பட்டுள்ள எழுத்துமூல சட்டங்களின் கீழ் காணப்படும் விதிகளை நிறைவேற்றல.
  2. வேறு எழுத்துமூல நீதியின் கீழ் உள்ள விதிகளை நிறைவேற்றுதல.
  3. தொற்று நோய்கள் மற்றும் பரவக்கூடிய நோய்களைத் தடுத்தல.
  4. சுகாதார கல்வி மற்றும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  5. ஆபத்தான மற்றும் விரும்பத்தகாத வர்த்தகங்களை ஒழுங்குபடுத்துதல்.
  6. விற்பனைக்கான உணவுப் பொருட்களின் தரக் கட்டுப்பாட்டை நிறுவுதல்.
  7. நெடுஞ்சாலைத் தூண்கள், நடைபாதையிலுள்ள மதகுகள், பள்ளங்கள் போன்றவற்றைக் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
  8. கட்டடங்கள் மற்றும் நிர்மாணப் பணிகளை சீராக்கல் மற்றும் அவற்றை முகாமைப்படுத்தல்.
  9. பொதுச் சந்தைகளை அமைத்து அவற்றை பராமரித்தல்.
  10. தெரு விளக்குகளை அமைத்தல்.
  11. மயான பூமிகளை மற்றும் தகனக் கிரிகை நிலையங்களை பராமரித்தல்.
  12. பூங்காக்கள் மற்றும் திறந்த வெளிகளை பராமரித்தல்.
  13. நூல் நிலைய சேவைகளை பராமரித்தல்.
  14. முன்பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களை நடத்துதல்.
  15. விளையாட்டு மைதானங்களை நிறுவி அதனை பராமரித்தல்.
  16. பலவித காரணங்களுக்காக தேவையான இடைக்கால துணைச் சட்டங்களை உருவாக்கல்.
  17. சுற்றாடல் சுத்தத்தைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றைப் பராமரித்தல்.
  18. மக்களின் பொது நலனுக்காக பிரதேச சபைச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரம்புக்குள் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ளல்.
  19. தேசிய அபிவிருத்தியின் போது மத்திய அரசாங்கத்துக்குத் தேவையான சேவையை உள்ளுராட்சி சபையின் மூலம் வழங்குதல்.
  20. பிரதேச மக்கள் செலுத்தும் வரியின் பலன்களை அவர்களுக்கு முடிந்தவரை திருப்பிக் கொடுத்தல் போன்றவை.

You may have missed